நான் இன்னும் என்ன செய்ய முடியும் ? என்னைத் தூக்கிலிட வேண்டுமா? யூடியூபர் கதறல்…!

Published by
Hema

அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதி என்று அழைத்ததற்காக யூடியூபர் கைது செய்யப்பட்டார்.

அருணாச்சல பிரதேசத்தில் இட்டாநகரில் யூடியூபர் பராஸ் சிங் என்பவர் பஞ்சாப் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அருணாச்சல பிரதேச எம்.எல்.ஏ நினோங் எரிங்கிற்கு எதிராக யூடியூபில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், வடகிழக்கு மாநில மக்கள் மீது தவறான விருப்பத்தையும் வெறுப்பையும் தூண்டியது மற்றும் அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதி என்று அழைத்ததாகவும் யூடியூபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து பஞ்சாப் போலீசார் பராஸ் சிங் மீது வழக்கு பதிவு செய்து செவ்வாய்க்கிழமை மாலை அவரை கைது செய்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவரை அருணாச்சல பிரதேச காவல்துறையிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக லூதியானா போலீஸ் கமிஷனரிடம் பேசியதாக அமைச்சர் கீரன் ரிஜிஜு ட்வீட் செய்துள்ளார்.

மேலும் வழக்கு பதிவைத் தொடர்ந்து பராஸ் அந்த வீடியோவை யூடியூபில் இருந்து நீக்கியதுடன் மன்னிப்புக் கேட்டு ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.மேலும் எதிர்ப்புகள் அதிகரித்து வருவதால் வீடியோ கமெண்டில் அவர் “நான் இன்னும் என்ன செய்ய முடியும்? நான் இப்போது என்னைத் தூக்கிலிட வேண்டுமா?” என்று ஆவேசத்துடன் பேசியுள்ளார், அதனுடன் அவரது தாயும் பராஸ் சிறுவன் என்றும் அவரை மக்கள் அனைவரும் மன்னிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனைக் கண்டித்து அருணாச்சல பிரதேச அமைச்சர்கள் ட்விட்டரில் கண்டணம் தெரிவித்து வருகின்றனர்.

Published by
Hema

Recent Posts

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

11 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

50 minutes ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

3 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

4 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

5 hours ago