மாநில அரசுகளுக்கு ஆதரவான தீர்ப்பு.. டெல்லி ஆளுநரை நேரில் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்.!

Published by
மணிகண்டன்

நேற்று உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் டெல்லி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனாவை நேரில் சென்று சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு அதிகாரங்கள் குறித்த வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதில், நிர்வாகம் தொடர்பாக அரசு அதிகாரிகள் இடமாற்றம் உளிட்ட செயல்பாடுகளில் மக்களால் தேர்நதெடுத்த அரசுக்கே முழு அதிகாரம் இருப்பதாகவும், மாநில அரசு உரிமைகளில் மத்திய அரசு தலையிட கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இந்த தீர்ப்பு வெளியான பிறகு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலில் டெல்லி துணை நிலை ஆளுநர் விகே.சக்சேனா இல்லத்திற்கு சென்றுள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்று கெஜ்ரிவால் தரப்பு பதில் கூறியுள்ளது. அதன் பிறகு தனது அமைச்சர்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது .

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ‘இன்றைய உச்ச நீதிமன்ற உத்தரவு வரலாற்று சிறப்புமிக்கது. அநீதி இழைக்கப்பட்ட டெல்லி மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதி வழங்கியுள்ளது.’ என்று செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

44 minutes ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

1 hour ago

ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…

1 hour ago

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

1 hour ago

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

2 hours ago

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

3 hours ago