ED's response in the case filed by Arvind Kejriwal [file image]
Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு.
டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து கடந்தாண்டு டெல்லி முன்னாள் துணை முதல் மணீஷ் சிசோடியவை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.
இதையடுத்து அந்த வழக்கு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த சூழலில் கடந்த மாதம் 21ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் ஒரு வார காலம் காவலில் எடுத்து கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்ட பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்பின் நீதிமன்ற காவலில் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அமலாக்கத்துறை கைதை எதிர்த்தும் ஜாமீன் கோரியும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், டெல்லி உயர்நீதிமன்றம் கெஜ்ரிவாலின் மனுவை நிராகரித்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அமலாக்கத்துறையும் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. அதில் சில பரபரப்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை பதிவில் மனுவில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.
லஞ்சம் அளித்தவருக்கு ரூ.192 கோடி கிடைக்கும் வகையில் மதுபான கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. லஞ்சம் அளித்தவருக்கு சாதகமாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். கெஜ்ரிவாலுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்த காரணத்தால் அவரை கைது செய்துள்ளோம். இதனால் அவருக்கு எந்த சிறப்பு சலுகையும் காட்ட முடியாது.
மேலும், மதுபான முறைகேடு நடந்தபோது அரவிந்த் கெஜ்ரிவால் 170 செல்போன்கள் பயன்படுத்தியதாகவும், பின்னர் கெஜ்ரிவால் உள்ளிட்ட 36 பேர் சேர்ந்து அதனை அளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது செல்போனின் password கேட்டபோது கூட கெஜ்ரிவால் அதனை தர மறுக்கிறார் என பல்வேறு பகிர் தகவல்கள் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…