திடீரென ராஜஸ்தான் ஆளுநரை சந்தித்த முதல்வர் அசோக் கெலாட்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் , துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் ஆகிய இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. இதனால், சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் தனியே முகாமிட்டுள்ளார். சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அசோக் கெலாட் அரசு முயற்சி செய்து வருகிறது. இதனால், ராஜஸ்தானில் அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதைக்குரிய சந்திப்பு என்று கூறப்பட்டாலும், அசோக் கெலாட்டுக்கு ஆதரவளிக்கும் ராஜஸ்தான் எம்.எல்.ஏக்களின் பட்டியலையும் , தனக்கு ஆதரவளித்த கட்சிகளின் பட்டியலையும் கெஹ்லாட் ஒப்படைத்தார் என கூறப்படுகிறது.
அசோக் கெஹ்லோட்டுக்கு 102 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இது அவரது ஆட்சியை காப்பாற்ற தேவையான எண்ணிக்கையை விட 1 அதிகம் உள்ளது என கூறப்படுகிறது. கெஹ்லோட் மற்றும் மிஸ்ரா இடையேயான சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது என கூறப்படுகிறது.
மேலும், கொரோனா கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போது பேசியதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…