அசாமில் ஆக்ஸிஜன் ஆலைகளுக்கு 100% இலவச மின்சாரம் – அதிரடி அறிவிப்பு !

கொரோனா நெருக்கடிக்குத் தயாராவதற்கு புதிய அறிவிப்பை அசாம் அரசு வெளியிட்டுள்ளது .ஆக்ஸிஜன் ஆலைகளுக்கு 100% இலவச மின்சாரம்.
அசாமில் செவ்வாயன்று அறிவிப்பு ஓன்றை வெளியிட்டுள்ளது, அதில் அசாமில் உள்ள ஆக்ஸிஜன் ஆலைகளுக்கு 100% இலவச மின்சாரம் வழங்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. செவ்வாய்கிழமையன்று அசாமில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 73 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுள்ளனர்.அசாமில் இதுவரையிலான உயிரிழப்பு 2,344 ஆக அதிகரித்துள்ளது.
அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,835 ஆக அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதுவரையிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,40,858 ஆக உயர்ந்துள்ளதாக அசாம் அரசு தெரிவித்துள்ளது.
தற்போது 46,393 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் கூறியுள்ளது, இதன் காரணத்தினால் வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு மோசமடைய வாய்ப்பு உள்ளது என்பதால் அங்கு செயல்படும் அனைத்து ஆக்ஸிஜன் ஆலைகளுக்கும் 100 சதவீதம் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.