Categories: இந்தியா

500 ரூபாய் நோட்டுகளில் படுத்து உறங்கும் அசாம் அரசியல் தலைவர்!

Published by
பாலா கலியமூர்த்தி

Assam: அசாமில் அரசியல் தலைவர் ஒருவர் 500 ரூபாய் நோட்டுகளில் தூங்குவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அசாமில் பாஜக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர் ரூபாய் நோட்டுகள் குவியலில் தூங்கிக் கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாஜக கூட்டணிக் கட்சியான ஐக்கிய மக்கள் கட்சி லிபரலின் (UPPL) முன்னாள் தலைவர் பெஞ்சமின் பாசுமாதாரி என்பவர் உடல்குரி மாவட்டத்தில் உள்ள பைரகுரியில் கிராம சபை மேம்பாட்டுக் குழுவின் தலைவராக உள்ளார்.

இந்த சூழலில் பெஞ்சமின் பாசுமாதாரி 500 நோக்குகள் அடுக்கி வைத்திருக்கும் கட்டிலில் படுத்தபடி உடல் முழுவதும் ரூபாய் நோட்டுக்களால் சூழப்பட்டு அரை நிர்வாணமாக தூங்குவது போன்ற புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்து அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக இந்த புகைப்படம் UPPL மற்றும் பாஜகவினரை முகம் சுழிக்க வைத்துள்ளது.

போடோலாந்து பிராந்தியத்தில் UPPL கட்சியானது பிரமோத் போரோ தலைமையில் உள்ளது. இந்த கட்சி தற்போது அசாமில் பாஜக கூட்டணியில் இருக்கும் நிலையில், பெஞ்சமின் பாசுமாதாரியின் புகைப்படம் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் முழுமையான விசாரணையை கோரியுள்ளனர். மேலும், பாசுமாதாரி ஊழலில் ஈடுபட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த குறித்து அசாம் எதிர்க்கட்சித் தலைவர் தேபப்ரதா சைகியா கூறியதாவது, இது அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு வைரலான புகைப்படம் பண மூட்டைகளுடன் UPPL தலைவர் உறங்குவதை சித்தரிக்கிறது. ஊழலின் இந்த அப்பட்டமான காட்சி உடனடி நடவடிக்கையை கோருகிறது. எனவே, இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம் இது என தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக அமலாக்கத்துறை அல்லது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே, பெஞ்சமின் பாசுமாதாரி UPPL தலைவராக இருந்தபோது, ஊழல் குற்றச்சாட்டுக்காக அவரை கட்சியிலிருந்து கடந்த ஜனவரி 10ம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

10 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

12 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

16 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

17 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

19 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

19 hours ago