அசாம் முழுவதும் நாளை இரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வேகமாக வரும் ஓமைக்ரான்( Omicron) தொற்றை கருத்தில் கொண்டு, பல மாநிலங்கள் இரவு ஊரடங்கு உத்தரவை விதிக்க முடிவு செய்துள்ளன. இப்போது அஸ்ஸாமும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மாநில சுகாதார அமைச்சர் கேசவ் மஹந்த் ஒரு புதிய நிலையான செயல்பாட்டு நடைமுறையை அறிவித்தார். இதில் இரவு 11:30 முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவித்தார்.
அசாமின் புதிய உத்தரவு படி, அனைத்து வணிக நிறுவனங்கள், உணவகங்கள், ஷோரூம்கள், மளிகைக் கடைகள் இரவு 10:30 மணிக்குள் தங்கள் கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 17 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளதாகவும், அதில் 115 பேர் குணமடைந்து விட்டதாகவும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலத்தில் ஓமைக்ரான் தொற்றால் யாரும் பாதிக்கவில்லை. இருப்பினும், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்த ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31, 2021 அன்று பொருந்தாது என அசாம் அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன் இரவு ஊரடங்கை மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…