அடேங்கப்பா: ஒரு ஊரே சேர்ந்து கீழே இருந்த லாரியே மேலே இழுத்து வந்த சம்பவம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

பள்ளத்தில் சரிந்த லாரியை ஒரு ஊரே சேர்ந்து இழுத்த அதிசியம் நாகாலாந்தில் நடந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நாகாலாந்தில் சரக்குகளுடன் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று, திடீரென பள்ளத்தில் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக அது மிகவும் ஆழமான பள்ளம் இல்லை. ட்ரைவர் மற்றும் கிளீனர் சிறிய காயங்களுடன் தப்பினர். ஆனால், பள்ளத்தில் சரிந்த லாரியை எப்படி மேல கொண்டு வரலாம், ஒரு கிரேனை கொண்டு வந்து மேல தூக்கலாம், இழுக்கலாம். ஆனால் அந்த இடத்துக்கு கிரேன் வருவதற்கு சாத்தியமில்லை, மிக குறுகிய சாலை, திரும்ப செல்ல முடியாது. இப்படி இருக்கும் நிலையில், ஒரு ஆசிரியமும், அதிசயமும் நிகழ்ந்துள்ளது.

அது என்னவென்றால், அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கிராம மக்கள், மேலும் அப்பகுதிக்கு பயணம் செய்தவர்கள் என அனைவரும் ஒன்றாக திரண்டு, பல கயிறுகளை லாரியில் கட்டி, ஒரு ஊரே சேர்ந்து அந்த லாரியை கொஞ்ச கொஞ்சமாக பள்ளத்தில் இருந்து மேல இழுத்துள்ளனர். இது ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறலாம். ஏனெனில் கீழே இருந்த லாரியை எப்படி மேலே கொண்டுவருவது என்ற எண்ணிய நிலையில், இப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது.

இதை பார்த்தால் மக்கள் ஒன்று சேர்ந்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு அது புரியும். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதனை ட்விட்டர் பக்கத்தில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் Mmhonlumo Kikon என்பவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

2 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

2 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

3 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

4 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

6 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

7 hours ago