பள்ளத்தில் சரிந்த லாரியை ஒரு ஊரே சேர்ந்து இழுத்த அதிசியம் நாகாலாந்தில் நடந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாகாலாந்தில் சரக்குகளுடன் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று, திடீரென பள்ளத்தில் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக அது மிகவும் ஆழமான பள்ளம் இல்லை. ட்ரைவர் மற்றும் கிளீனர் சிறிய காயங்களுடன் தப்பினர். ஆனால், பள்ளத்தில் சரிந்த லாரியை எப்படி மேல கொண்டு வரலாம், ஒரு கிரேனை கொண்டு வந்து மேல தூக்கலாம், இழுக்கலாம். ஆனால் அந்த இடத்துக்கு கிரேன் வருவதற்கு சாத்தியமில்லை, மிக குறுகிய சாலை, திரும்ப செல்ல முடியாது. இப்படி இருக்கும் நிலையில், ஒரு ஆசிரியமும், அதிசயமும் நிகழ்ந்துள்ளது.
அது என்னவென்றால், அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கிராம மக்கள், மேலும் அப்பகுதிக்கு பயணம் செய்தவர்கள் என அனைவரும் ஒன்றாக திரண்டு, பல கயிறுகளை லாரியில் கட்டி, ஒரு ஊரே சேர்ந்து அந்த லாரியை கொஞ்ச கொஞ்சமாக பள்ளத்தில் இருந்து மேல இழுத்துள்ளனர். இது ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறலாம். ஏனெனில் கீழே இருந்த லாரியை எப்படி மேலே கொண்டுவருவது என்ற எண்ணிய நிலையில், இப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது.
இதை பார்த்தால் மக்கள் ஒன்று சேர்ந்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு அது புரியும். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதனை ட்விட்டர் பக்கத்தில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் Mmhonlumo Kikon என்பவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…