காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டர் நிறுவனம் ஒருதலை பட்சமாக நடந்துகொள்கிறது என்று சாடியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி, ட்விட்டர் நிறுவனத்தின் விதிமுறையை மீறியதாக அவரது ட்விட்டர் பக்கத்தை முடக்கியுள்ளது. இதனை தொடர்ந்து மற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பக்கம் ஆகியவற்றையும் ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.
இது தொடர்பாக தற்போது ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ட்விட்டர் நிறுவனம் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறது. மத்திய அரசின் சொல் கேட்டு நடக்கிறது. இந்த தாக்குதல் ராகுல்காந்தியின் மீது அல்ல. ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் ஆகும்.
நாடாளுமன்றத்திலும் எங்களுக்கு பேசுவதற்கு உரிமை இல்லாமல், ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டு விடுகின்றன. நமது கருத்துக்களை சொல்வதற்கு சுதந்திரம் உண்டு என்று ட்விட்டர் நிறுவனத்தை நினைத்தேன். ஆனால், அவ்வாறு இல்லை, இது ஒரு வெளிப்படையான சமூக தளமாக இல்லாமல் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…