இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த மேலும் ஒரு கப்பல் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த எம்.வி கெம் புளூட்டோ கப்பல் மீது நேற்று அரபிக்கடலில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த டிரோன் தாக்குதல் பரபரப்பு அடங்குவதற்குள் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த மற்றொரு கப்பல் மீது செங்கடலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
செங்கடல் வழியாக வந்த காபான் நாட்டைச் சேர்ந்த சாய்பாபா என்ற கப்பல் இந்திய தேசிய கொடியுடன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த போது தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து அமெரிக்கா தரப்பில் கூறுகையில், தெற்கு செங்கடலில் சென்று கொண்டு இருந்த இரண்டு வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்து அமெரிக்க கடற்படையிடம் உதவி கோரப்பட்டது. உடனே தாக்குதல் நடத்தப்பட்ட ஏமனில் உள்ள ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்கு அமெரிக்க கடற்படை சென்றது.
இந்திய கடல் எல்லையில் கப்பல் மீது தாக்குதல்… 20 இந்தியர்கள் தவிப்பு.!
அங்கு 4 ஆள் இல்லா விமானங்களை தங்களது போர்க்கப்பல் சுட்டு வீழ்த்தியது. செங்கடல் வழியாக இந்திய கொடியுடன் வந்த சரக்கு கப்பலையும், BLAAMANEN சொந்தமான நார்வே கொடியுடன் வந்த சரக்கு கப்பலையும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த 2 சரக்கு கப்பலில் டேங்கர் மீது டிரோன் மோதியது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
அக்டோபர் மாதம் முதல் ஹூதி கிளர்ச்சியாளர்களால் இதுவரை 15 வணிக கப்பல் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது என அமெரிக்க தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து தாக்குதல்களால் பல நாடுகளில் இருந்து இந்தியா வரும் கப்பல் மாற்று வழியில் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…