பதஞ்சலியின் கொரோனில் ஆயுர்வேத மருந்துக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை – உலக சுகாதார அமைப்பு!

Published by
Rebekal

பதஞ்சலியின் கொரோனில் எனும் ஆயுர்வேத மருந்திற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நிறுவனத்தின் அதிபர் பாபா ராம் தேவ் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என உலக சுகாதார மையத்தின் மருத்துவ கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸுக்கு எதிராகப் பல்வேறு நாடுகளிலும் தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டு வந்த நிலையில், தற்போது சில நாடுகளில் கண்டறியப்பட்ட மருந்துகளுக்கு அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரபலமான பாரம்பரிய மருத்துவ நிறுவனமாக மக்கள் மத்தியில் அறிமுகமாகியுள்ள பதஞ்சலி எனும் நிறுவனத்தின் சார்பில் கொரோனில் எனும் மருந்து கடந்த வருடம் ஜூன் மாதம் அந்நிறுவனத்தின் அதிபரால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த மருந்து கொரோனாவை குணப்படுத்துமா என பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து இது கொரோனா மருந்துகளுடன் சேர்த்து கொடுப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கும் ஏற்றது என கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து இந்த மருந்து சற்றே மேம்படுத்தப்பட்டு கொரோனில் கிட் எனும் பெயருடன் டெல்லியில் உள்ள பதஞ்சலி நிறுவனத்தால் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் அந்நிறுவனத்தின் அதிபர், மத்திய அமைச்சர்கள் மற்றும் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்த நிலையில், இந்த கொரோனில் கிட் மருந்து கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு மூன்று முதல் ஏழு நாட்களில் 100% குணப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளதாக உலக சுகாதார மையம் மற்றும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என பதஞ்சலி நிறுவனத்தின் அதிபர் பாபா ராம்தேவ் அவர்கள் கூறியுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள உலக சுகாதார அமைப்பின் மத்திய மருந்து கட்டுப்பாட்டு பிரிவு, தங்களுக்கு ஆயுஷ் அமைச்சகத்திடம் இருந்து இது மருந்து பொருள் என்ற உறுதி மட்டுமே அளிக்கப்பட்டதாகவும், கொரோனாவை குணமாக்கும் என்பது தொடர்பாக தாங்கள் இந்த கொரோனில் மருந்துக்கு எந்த ஒரு சான்றிதழும் அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த கொரோனில் மருந்தை தனியாக உட்கொண்டு வருவதால் கொரோனா முழுமையாக  குணமடையும் என்பதற்கான சான்றிதழையோ, ஒப்புதலையும் உலக சுகாதார மையம் அளிக்கவில்லை எனவும் தெளிவுபடுத்தி கூறியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

44 minutes ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

1 hour ago

ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…

1 hour ago

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

1 hour ago

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

2 hours ago

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

3 hours ago