எஸ்பிஐ, பிஎன்பி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு எச்சரிக்கையை தற்பொழுது அறிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் கொரோனாவில் இருந்து எப்படி தப்பிப்பது என பல்வேறு வழிமுறைகளை யோசித்து வருவது போல இந்த சமயத்திலும் சில கொள்ளை கும்பல் எப்படி மக்களின் பணத்தை மோசடி செய்வது என திட்டங்களை தீட்டி வருகிறார்கள். முன்பெல்லாம் மோசடி செய்பவர்கள் யார் என்பது குறித்து உடனடியாக கண்டறிய முடிந்தது. ஆனால் தற்போது மோசடி செய்யக் கூடியவர்கள் யார் என்பதை கண்டறிய சற்று கடினமாக உள்ளதாக சில வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து எஸ்பிஐ வங்கி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாங்கி தெரிவித்துள்ள அறிவிப்பில், வங்கியிலிருந்து பணம் எடுக்கும் பொழுது கியூ ஆர் கோடு வைத்தும் ஸ்கேன் செய்ய கூடாது எனவும் இவ்வாறு ஸ்கேன் செய்யும் பொழுது உங்களுக்கு பணம் கிடைக்காது எனவும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்தும் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தொலைபேசி மூலமாக அல்லது எஸ்எம்எஸ் மூலமாக உங்களை அழைத்து பணம் தருகிறோம் என்பது போல பேசினாலும் நம்ப வேண்டாம் இதை நம்பி வாங்கி தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரித்துள்ளது. மேலும், ஐசிஐசிஐ வாங்கி சார்பில் வெளியிட்டுள்ள ரச்சரிப்பில், எஸ்எம்எஸ் மூலமாக அல்லது தொலைபேசி அழைப்பு மூலமாக வங்கியின் தகவல்களை எந்த ஒரு வாங்கி ஊழியர்களும் கேட்க மாட்டார்கள் அவ்வாறு கேட்டல் பகிர்ந்து கொள்ளாதீர்கள் அது மோசடி கும்பலின் வேலை என கூறப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…