கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுக்க பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக்க பின்பற்றப்பட்டு வருகிறது. இதுவரை 700க்கும் அதிகமானோர் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 20 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த முஜீப் முஹமது என்கிற சாஃப்டவேர் இன்ஜினியர் தனது இணையதள பக்கத்தில், கொரோனா குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது, எல்லோரும் வீட்டை விட்டு வெளியே வாருங்கள். தும்மும்போது கைகுட்டையின்றி தும்முவோம். வைரஸை பரப்புவோம் என சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக தெரிகிறது. இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியுள்ளது.
இதனை அடுத்து, அந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த முஜீப் முஹமது என்கிற சாஃப்டவேர் இன்ஜினியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…