சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் தியாக தினத்தை முன்னிட்டு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளார்.
பஞ்சாபின் 18-வது முதலமைச்சராக பகவந்த் மான் புதன்கிழமை பதவியேற்றார்.பஞ்சாப் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்,மானுக்கு பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்.
பகத்சிங்கின் உண்மையான சீடர்:
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், பகத்சிங்கைப் பற்றித் பஞ்சாப் தேர்தல் பிரசாரங்களிலும், அவரது உரைகளிலும் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.கெஜ்ரிவால் தன்னை பகத்சிங்கின் உண்மையான சீடர் என்று சொல்லிக் கொள்கிறார். சுதந்திரப் போராட்ட வீரர் மீது கட்சியின் பற்றையும் விசுவாசத்தையும் காட்ட, பகத் சிங்கின் சொந்த கிராமத்தில் பகவந்த் மான் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
சட்டப்பேரவையில் பேச்சு:
இந்த சூழலில்,பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் பஞ்சாப் சட்டப்பேரவையில் நேற்று பேசிய போது சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங்,சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23-ஆம் தேதி, மாவீரர் தினத்தையொட்டி பொது விடுமுறை அளிக்கப்படும் என்றும்,பகத்சிங்கின் சொந்த கிராமமான கட்கர் கலன் கிராமத்திற்கு நேரில் சென்று அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் பஞ்சம மக்களை கேட்டுக் கொண்டார்.
விடுமுறை:
இந்நிலையில்,பஞ்சாப்பில் இன்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,பஞ்சாப்பில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாவீரர்கள் தினம்:
சுதந்திர போராட்ட வீரர்களான பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர், லாகூர் மத்திய சிறையில், கடந்த 1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.இவர்களது நினைவு நாள் மாவீரர்கள் தினம் என அழைக்கப்படுகிறது.இந்நிலையில்,பகத்சிங்கின் நினைவை போற்றும் வகையில் பஞ்சாப்பில் இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…