யாருக்கு எத்தனை சீட்? கூட்டணிக்குள் குழப்பம்..?? தனித்துப்போட்டி! பரபர பீகார்( 2020) தேர்தல்…

Published by
kavitha

பீகார் ( 2020) சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் பாஜக அறிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகள் அக்.,28ந்தேதி தொடங்கி நவ., 3 மற்றும் நவ.,7ந்தேதி என மூன்று கட்டங்களாக இங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக மற்றும் ஆளும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சிகள் தங்களது தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதுதொடர்பாக கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், “மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 122 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதேபோல பாஜவிற்கு 121 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஒதுக்கிய தொகுதிகளில் இருந்து 7 இடங்கள் ஜிதன் ராம் மன்ஜியின் இந்துஸ்தான் அவாம் மோர்சாவிற்கு வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த தேர்தலில் லோக் ஜனசக்தியானது தனித்து விடப் பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில பாஜ தலைவர் மற்றும் பெட்டியா எம்பியுமான சஞ்சய் ஜெய்ஸ்வால் இது குறித்து கூறுகையில், “பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் கூட்டணியானது அப்படியே இருக்கின்றது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முகமாக நிதிஷ்குமார் உள்ளார். அவரது அனுமதியின்றி கூட்டணியில் யாரும் சேருவதோ, வெளியேறுவதோ இஇயலாது” என்று கூறினார்

இந்நிலையில் இத்தேர்தலில் பாஜக ஜேடியு கூட்டணியை எதிர்த்து லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி களமிறங்குகிறது. இந்நிலையில் மெகா கூட்டணியில் நேற்று விரிசல் ஏற்பட்டது. இக்கூட்டணியில் சேர்ந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி 7 இடங்களை கேட்டிருந்தது. ஆனால் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி 2 தொகுதிக்கு மேல் தர முடியாது என்று உறுதியாக கூறிவிட்டார். இதனால் 7 தொகுதியில் தனித்து போட்டியிடப் போவதாக ஜேஎம்எம் கட்சி நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தொகுதி பங்கீடுகள்முடிந்த நிலையில், பாஜக 27 தொகுதிக்கான முதல் வேட்பாளர்களின் பட்டியலை நேற்று வரிசையாக வெளியிட்டது.

 

Recent Posts

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

18 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

41 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

55 minutes ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

16 hours ago