பாட்னாவில் உள்ள பள்ளியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டிருந்த பள்ளி முதல்வர் அரவிந்த் குமார் என்பவருக்கு மரணதண்டனை வழங்கி பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்பொழுதைய காலகட்டத்தில் வேலியே பயிரை மேய்ந்தாற்போல பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்களை பாதுகாக்க வேண்டிய ஆசான்களே சிலர் அந்த குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் விதமாக நடந்து கொள்கிறார்கள். அது போல பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவின் புல்வாரி ஷெரிப் எனும் பகுதி யில்உள்ள பள்ளி ஒன்றில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்தாம் வகுப்பு படிக்க கூடிய மாணவி ஒருவரை மிரட்டி பள்ளியின் முதல்வர் அரவிந்த் குமார் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருந்த பள்ளி முதல்வர் அரவிந்த் குமாருக்கு அவர் செய்த குற்றத்திற்காக மரண தண்டனையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் அபிஷேக் குமார் என்பவருக்கு 50 ஆயிரம் அபராதமும் விதித்து பீகார் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…