பீகாருக்கு திரும்பி வரும் மாணவர்களுக்கான கட்டணத்தை ரெயில்வேக்கு பீகார் அரசு கொடுத்துவிடும் என முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறினார்.
இந்தியாவில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கடந்த 40 நாள்களுக்கு மேலாக உள்ளது. இதனால், பிழைப்புக்காகவும், படிக்கவும் தங்கள் மாநிலங்களில் இருந்து வெளிமாநிலங்களில் சென்று பலர் படித்தும், வேலை செய்து வருகிறார்கள். தற்போது ஊரடங்கு காரணமாக அவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த சூழலில் வெளிமாநிலங்களிலிருந்து மாணவர்கள், தொழிலாளர்கள் பலர் நடந்தும், சைக்கிள் மூலமாகவும் தங்கள் சொந்த ஊர் செல்கின்றனர்.
இதனால், பிற மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக, மத்திய அரசு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், வெளிமாநிலங்களில் இருந்து பீகாருக்கு திரும்பி வரும் மாணவர்களுக்கான கட்டணத்தை ரெயில்வேக்கு பீகார் அரசு நேரடியாக கொடுத்துவிடும் என கூறினார்.
இதற்கு முன் சிறப்பு ரெயிலில் வரும் தொழிலாளர்கள் தங்களை 21 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டால் ரூ.1000 வழங்கப்படும் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…