Categories: இந்தியா

பில்கிஸ் பானு வழக்கு: விசாரணை மே-9 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.!

Published by
Muthu Kumar

பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் 11 பேருக்கு எதிரான மனு விசாரணை மே 9 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 11பேருக்கு கடந்த 2008இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த குற்றவாளிகள் 11 பேரும் கடந்த சுதந்திரத்தினத்தின்  போது நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் தொடர்ந்து இருந்தார். தண்டனைக்கு முன்னதாக விடுதலை செய்யப்பட்டது தொடர்பாகவும் மனு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று மே 2ஆம் தேதி விசாரிக்கப்பட்ட நிலையில், 11 பேர் விடுதலை செய்யப்பட்ட அடிப்படை காரணங்களை கேட்ட உச்சநீதிமன்றம் அதற்கான உரிய ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய மற்றும் குஜராத் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இன்று அவருக்கு நடந்தது நாளை வேறு ஒருவருக்கு நடக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்ததுடன், விடுதலைக்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காவிட்டால் நீதிமன்றமே முடிவுக்கு வர நேரிடும் என எச்சரித்தனர், இதனையடுத்து மே 2ஆம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், நேற்று விசாரணைக்கு வந்த வழக்கில் மத்திய மற்றும் குஜராத் அரசு ஆவணங்களை சமர்ப்பிக்க ஒப்புக்கொண்டனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணை மே 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

Published by
Muthu Kumar

Recent Posts

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

9 minutes ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

30 minutes ago

ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…

30 minutes ago

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

45 minutes ago

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

1 hour ago

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

2 hours ago