ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்தது தொடர்பாக பாகிஸ்தான் ஆயுதப்படை இரங்கல்.
நீலகிரி குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிர் இழந்தனர். ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.
பிபின் ராவத்தின் அகால மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்திய விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தளபதி ராவத்தின் மறைவால் நாடு முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், பாகிஸ்தான் ஆயுதப்படை இரங்கல் தெரிவித்துள்ளது. அதில், சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் சி.ஜே.சி.எஸ்.சி., ஜெனரல் நதீம் ராசா மற்றும் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா, சிஓஏஎஸ் ஆகியோர் மதிப்புமிக்க உயிர்களை தியாகம் செய்துள்ளனர் என்று பாகிஸ்தான் ராணுவத்தின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…