விவசாயிகள் பிரியாணி உண்பதால் பறவை காய்ச்சல் பரவுகிறது – பாஜக MLA

Published by
பாலா கலியமூர்த்தி

போராட்டம் நடத்தும் விவசாயிகள் பிரியாணி உண்பதால் பறவை காய்ச்சல் பரவுகிறது என்று ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கொண்டுவந்த புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் 40 நாட்களு மேலாக அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் 8 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த சுமுக நிலையம் ஏற்படவில்லை. மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுதல், குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்தல் போன்றவை விவசாயிகளின் கோரிக்கைகளாக இருந்து வருகிறது.

இந்நிலையில், போராட்டம் நடத்தும் விவசாயிகள் பிரியாணி உண்பதால் பறவை காய்ச்சல் பரவுகிறது என்று ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ மதன் திலாவர் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். விவசாயிகள் என்று அழைக்கப்படும் சிலர் சதி செய்கிறார்கள் என்றும் இந்த விவசாயிகள் எந்தவொரு இயக்கத்திலும் பங்கேற்கவில்லை. ஆனால், கோழி பிரியாணி மற்றும் உலர் பழங்களை ஓய்வுக்காக அனுபவிக்கிறார்கள். இது பறவைக் காய்ச்சல் பரவுவதற்கான சதி. விவசாயிகள் போராட்டம் நடத்த வரவில்லை, சுற்றுலாவாக அனுபவிக்கிறார்கள்.

அனைத்து வகையான ஆடம்பரங்களையும் பெறுகிறார்கள் என்று கூறியுள்ளார். அவர்களில் போராளிகள், கொள்ளையர்கள் மற்றும் திருடர்கள் இருக்கலாம். இல்லை விவசாயிகளின் எதிரிகளாகவும் கூட இருக்கலாம். இவர்கள் தான் நாட்டை அழிக்க விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களில் போராட்டத்தை அரசாங்கம் அகற்றாவிட்டால், நாட்டில் ஒரு பயங்கரமான பறவைக் காய்ச்சலை எதிர்பார்க்க முடியும். இவர்கள் ஒன்று சேர்வதை தடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளதாகவும், இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

எம்.எல்.ஏ.மதன் திலாவரின் கருத்துக்கு மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. அவரது அறிக்கை வெட்கக்கேடானது. இது பாஜகவின் சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறது என கூறியுள்ளது. எம்.எல்.ஏ. மதன் திலாவரின் கருத்துக்களுக்கு பதிலளித்த ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா, விவசாயிகளுக்கு கொள்ளையர்கள் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

9 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

10 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

10 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

11 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

11 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

12 hours ago