NDA கூட்டணி: நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. பாஜக 240 தொகுதிகளையும், காங்கிரஸ் 99 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.
இதில் பாஜகவுக்கு கடந்த தேர்தல்கள் போல பெரும்பான்மை வெற்றி கிடைக்கவில்லை. அதனால், பாஜக தலைமையின் கீழ் உள்ள NDA கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது.
முக்கியமாக, 16 இடங்களை வென்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் 12 இடங்களை பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதனால் பாஜக உயர்மட்ட தலைவர்கள் இன்று சந்திரபாபு நாயுடு (TDP), நிதிஷ் குமார் (JD(U)) ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர் என்று செய்தியை PTI நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதே போல, இன்று இந்தியா கூட்டணி தலைவர்களும் டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தியா கூட்டணி அல்லாத மற்ற கட்சிகளின் ஆதரவை கோரி ஆட்சியமைக்க உள்ளனரா என்பது பற்றி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர் என்று கூறப்படுகிறது.
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…