மேற்குவங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூச்பெஹாரில் 4 பேருக்கு பதில் 8 பேரையாவது சுட்டுக்கொன்றிருக்க வேண்டும் என கூறிய பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்காவின் பரப்புரைக்கு தேர்தல் ஆணையம் தடை.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 4 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், எஞ்சியுள்ள 4 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் அனல் கிளம்பி வருகிறது. இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது கூச்பெஹாரில் 4 பேருக்கு பதில் 8 பேரையாவது சுட்டுக்கொன்றிருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்கா கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு எதிர்ப்புகளும் கிளம்பி வந்தது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்கா 2 நாள் பிரச்சாரம் செய்ய அம்மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதன்படி அவர் நாளை மதியம் 12 மணிவரை பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…