நிச்சயமாக நாங்கள் சட்டமன்றத் தேர்தலில் சிக்ஸர் விளாசி மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க தேர்தலை அடுத்து பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மேற்கு வங்காளத்தின் தாஸ்பூரில் உரையாற்றியபோது, வங்காளத்தில் பொதுமக்களுக்கு வரும் பணத்தில் 15% -25% ஊழல்நடைபெறுகிறது. சாலை அமைக்க மட்டுமே மோடி ரூ.25,000 கோடி வழங்கினார். அந்த பணம் எங்கே, எத்தனை சாலைகள் போடப்பட்டன.? மேற்கு வங்கம் வேகமாக பின்தங்கிய நிலையில் உள்ளது, இதற்கு மம்தா பொறுப்பு.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கிரீஸை கடக்கும் போதெல்லாம், அவர் ஒரு சிக்ஸர் அடிப்பார் என்பது உறுதி அதேபோல், மக்களவையில் உங்கள் ஆதரவோடு, நாங்கள் கிரீஸை தாண்டிவிட்டோம், நிச்சயமாக நாங்கள் சட்டமன்றத் தேர்தலில் சிக்ஸர் விளாசி மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு விவசாயின் கணக்கிற்கும் ரூ.6000 பாய் அனுப்பினோம். இந்த பணத்தை கொடுக்க இங்குள்ள விவசாயிகளின் பட்டியலை மம்தா எங்களுக்கு வழங்கவில்லை. பாஜக அரசு இங்கு அமைக்கப்பட்டால், உங்கள் ரூ.6000 முன்கூட்டியே உங்கள் கணக்கில் செலுத்தப்படும். அனுதாபம் சம்பாதிப்பதற்காக மட்டுமே மம்தா காயமடைந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறினார்.
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…