டெல்லியில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இதுவரை 89 பேர் பலி!

Published by
Rebekal

டெல்லியில் கருப்பு பூஞ்சைத் தொற்றால் 1,044 பேர் பாதிக்கப்பட்ள்ளதுடன், 89 பேர் உயிரிழந்துள்ளனர் என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி வருகிறது. பலர் இந்த பூஞ்சையால் தினமும் புதிதாக பாதிக்கப்படுவதுடன், உயிரிழக்கவும் செய்கின்றனர். டெல்லியில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தற்பொழுது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இருப்பினும் அங்கு கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

இது வரை டெல்லியில் 1,044 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர்  ஜெயின் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் சிகிச்சை பெற்றவர்களில் 92 பேர் கருப்பு பூஞ்சை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும், 89 பேர் இந்த கருப்பு பூஞ்சைத் தொற்றால் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட டெல்லியில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 10% பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

4 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

6 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

7 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

8 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

8 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

9 hours ago