பெங்களூரு குடோனில் நிலையற்ற ரசாயனத்தால் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று பெங்களூருவில் உள்ள சரக்கு-கொண்டு செல்லும் வாகன சேவை நிறுவனத்தில் உள்ள குடோனில் சில நிலையற்ற ரசாயனம் வெடித்த காரணத்தால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
மதியம் 12 மணியளவில் நடந்த இந்த சம்பவத்திற்கு 12:20 மணியளவில் சாமராஜ்பேட்டை ரேயான் வட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
பெங்களூரு தெற்கு போலீஸ் துணை கமிஷனர் ஹரீஷ் பாண்டே இது குறித்து தெரிவித்துள்ளதாவது, “பஞ்சர் கடைக்கு அடுத்த போக்குவரத்து குடோனில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. பஞ்சர் கடையில் உள்ள இருவர் உட்பட மூன்று பேர் பலியாகினர், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காவல்துறையினர் தெரிவித்துள்ளபடி, சில நிலையற்ற இரசாயனம் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும், தடயவியல் நிபுணர்கள் குண்டுவெடிப்புக்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர் மற்றும் விரைவில் அவர்களது கருத்தை தெரிவிப்பார்கள் என்று கூறியுள்ளனர்.
டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…
சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…
விருதுநகர் : ஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில்…
சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக…
சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…