அந்தமான் நிகோபார் தீவில் மேற்கொள்ளப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக நேற்று சோதனை செய்துள்ளது.ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுதாரி மற்றும் பிற பாதுகாப்பு அதிகாரிகள் ஏவுகணை சோதனையை மேற்பார்வையிட்டனர்.அப்போது,இந்த ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கியதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தவறுதலாக பாகிஸ்தாநனில் பிரம்மோஸ்:
சமீபத்தில்,பிரம்மோஸ் ஏவுகணை ஏர் ஸ்டாஃப் இன்ஸ்பெக்ஷனின் (CASI) போது இந்திய விமானப்படை பிரிவில் இருந்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறுதலாக பாகிஸ்தான் பகுதியில் வெடித்து சிதறியது.
இந்தியா வருத்தம்:
இதனால் அங்குள்ள உடைமைகள் மற்றும் உபகரணங்களுக்கு மிகக் குறைந்த சேதம் ஏற்பட்டது,ஆனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இச்சம்பவத்தை தொடர்ந்து,பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு இந்தியா கடிதம் அனுப்பி, இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தும், அறிக்கையும் வெளியிட்டது.
பிரம்மோஸ்:
பிரம்மோஸ் என்பது அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணையாகும்,இது நிலம் மற்றும் வான்வெளி என எங்கிருந்தும் ஏவக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…