புதுச்சேரியில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்திய 4 திமுக எம்எல்ஏக்கள் கைது செய்து போலீஸ் நடவடிக்கை.
நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்றும், இன்றும் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிஐடியூ, ஏஐடியூசி, யூடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த இரண்டு நாள் பொது வேலை நிறுத்த போராட்டத்தை போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், புதுச்சேரியில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்திய 4 திமுக எம்எல்ஏக்கள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில் குமார் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்து புதுச்சேரி போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதுச்சேரியில் தொழிற்சங்கத்தினர் 2வது நாளாக நிறுத்தம் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
மேலும், புதுச்சேரியில் மறியலில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் ஏ.ஐ.டி.யு.சி, உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…
கனடா : கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…