[Image source : Twitter/ANI]
பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 3 வீரர்கள் இறந்ததை அடுத்து உயிரிழப்பு 5-ஆக உயர்வு.
ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி பகுதியில், தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது.
வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 3 வீரர்கள் இறந்ததை அடுத்து உயிரிழப்பு 5-ஆக உயர்ந்துள்ளது. ரஜோரி மாவட்டத்தின் கன்டி வனப்பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ரஜோரியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கன்டி வனப்பகுதியில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்த நிலையில், மோதல் ஏற்பட்டுள்ளது. எனவே வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து ரஜோரி மாவட்டம் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…