#Breaking:முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு பதியலாம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published by
Edison

கர்நாடகா:நிலம் மறுசீரமைப்பு விவகாரத்தில் ஊழல் செய்ததாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது சிறப்பு குற்றவியல் வழக்கு பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

2006-07 ஆம் ஆண்டு பாஜக-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக இருந்தபோது,கர்நாடக தொழில்துறை பகுதி மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ், மாநில அரசு தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைப்பதற்காக பெல்லந்தூர்,தேவரபீசனஹள்ளி,கரியம்மன அக்ரஹாரா மற்றும் அமானிபெல்லந்தூர் கானே ஆகிய இடங்களில் 434 ஏக்கர் தனியார் நிலத்தை அரசு கையகப்படுத்தியது.

சட்ட விரோதமாக மறுமதிப்பீடு:

அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிலம்,சட்ட விரோதமாக மறுமதிப்பீடு செய்யப்பட்டு, மற்றொரு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அரசுக்கு மற்றும் அசல் நில உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.இதனையடுத்து,நிலம் மறுசீரமைப்பு விவகாரத்தில் விவகாரத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

நீதிமன்றம் அதிரடி உத்தரவு:

இந்நிலையில்,நிலம் மறுசீரமைப்பு விவகாரத்தில் ஊழல் செய்ததாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது சிறப்பு குற்றவியல் வழக்கு பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும்,ஊழல் தடுப்புச் சட்டம், 1988ன் 13(2)ன்படி,இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக்ஆயுக்தா போலீசாருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக,நிலம் மறுமதிப்பீடு செய்ததற்காக முன்னாள் முதல்வர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆதாரம் இல்லை என்று கர்நாடக லோக்ஆயுக்தா போலீசார் இந்த விவகாரத்தில் மூடல் அறிக்கையை தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

6 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

7 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

8 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

8 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

10 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

11 hours ago