#BREAKING: பெண் காவலர்களுக்கு இனி 8 மணி நேரம் மட்டுமே வேலை! – போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு

Published by
பாலா கலியமூர்த்தி

ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் 8-ஆம் தேதி கொண்டப்படுகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் உலக மகளிர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் மகளிரை கொண்டாடும் இந்த தினத்தில் பல்வேறு தலைவர்கள் மகளிர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மும்பையில் பெண் காவலர்களுக்கு இனி 8 மணி நேரம் மட்டுமே பணி புரியலாம் என்று போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே அறிவித்துள்ளார். குடும்பம் மற்றும் பணி சூழல் ஈடுகட்டும் விதமாக, மூன்று புதிய ஷிப்டுகளை அறிமுகம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் மும்பையில் பெண் காவலர்கள் 8 மணி நேர ஷிப்ட்கள் அடிப்படையில் பணிபுரிவார்கள் என்று உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது.

பெண் பணியாளர்களுக்கு ஆரோக்கியமான வேலை-வீடு சமநிலையில் உதவுவதே இந்த உத்தரவின் நோக்கமாகும். முன்னதாக மகாராஷ்டிர காவல்துறையின் தலைமை இயக்குநராக இருந்த பாண்டே 2022 ஜனவரியில் எட்டு மணி நேரப் பணியைத் கொண்டு வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மும்பையில் பெண் காவலர்களுக்கு இனி 8 மணி நேரம் மட்டுமே பணி புரியலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில், பெண் காவலர்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன என்பதை அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தினார். அதன்படி,  காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை மற்றும் இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை என மூன்று ஷிப்டுகளில் பணிபுரிய வேண்டும். மறுபுறம், இரண்டாவது விருப்பம் காலை 7 முதல் மதியம் 3 மணி வரை, மதியம் 3 முதல் இரவு 11 மணி வரை மற்றும் இரவு 11 முதல் காலை 7 மணி வரை பணிபுரிய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

1 hour ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

2 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

3 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago