இந்தியாவில் இன்று மட்டும் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 2 கோடிக்கு பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் நாடு தழுவிய அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது இதுவே அதிகபட்சம் என்பதாகும். இன்று பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், இன்று இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது. ஒரே நாளில் அதிக தடுப்பூசி சாதனை இந்தியாவுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு என்று மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி ஒரு கோடியே 64 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியது தான் இதுவரை அதிகபட்சமாக இருந்த நிலையில், இன்று 2 கோடி பேருக்கு செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளது.
நாட்டில் இதுவரை மொத்தம் 77 கோடிக்கு அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்பது இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…