தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் காங்கிரசில் இணைய மறுப்பு.
தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர், அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, அவரது இல்லத்தில் கிட்டத்தட்ட 4 முறை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது, காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பாகவும், 2024-ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக வகுப்பாளராகவும் செயல்படுவது தொடர்பாக தொடர்ச்சியாக ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில், 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான செயல்குழு ஒன்றை, நேற்று உருவாக்கி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுருந்தார். இந்த நிலையில், இதன் ஒரு பகுதியாக அவரை கட்சியில் கிற அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆனால், அவர் காங்கிரஸ் கட்சியில் அதிகாரபூர்வமாக சேர மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கனகிராஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், பிரசாந்த் கிஷோர் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், காங்கிரசில் பிரஷாந்த் கிஷோர் இணையாவிட்டாலும், அவர் வழங்கிய ஆலோசனைகளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…