விளையாட்டுத்துறைக்கான கேல் ரத்னா விருது, தயான் சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விளையாட்டுத்துறைக்கான வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் பெயரில் இவ்விருது இனி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மேஜர் தயான் சந்த் இந்தியாவின் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர் என்றும் நமது நாட்டின் மிக உயர்ந்த விளையாட்டு மரியாதை அவரது பெயரால் சூட்டப்படுவது பொருத்தமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். நமது நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கி இருப்பதாலும், ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் அணி நீண்ட வருடங்களுக்கு பிறகு அரையிறுதி வரை சென்று வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…