#Breaking:தேச துரோக வழக்கு பதியக் கூடாது – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published by
Edison

மத்திய அரசு தேச துரோக வழக்கு தொடர்பான சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்யும் வரை வழக்கு பதியக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் சுதந்திர போராட்டத்தை அடக்குவதற்காக தேச துரோக வழக்கு சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது.இந்த சட்டப்பிரிவு தற்போது வரை அமலில் உள்ள நிலையில்,பழிவாங்கும் நோக்கம்,அரசியல் காரணத்திற்காக அவை பயன்படுத்தப்படுகின்றது எனவும்,அதனை நீக்க கோரியும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் சார்பாக பொதுநல மனு உச்சநீதிமன்றதில் தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக,மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் ஆலோசனைக் கேட்ட நிலையில்,தேச துரோக வழக்கு சட்டப்பிரிவை நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும்,இல்லை எனில் அதில் திருத்தங்கள் செய்யப்படும் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனால், மறுபரிசீலனை பணிகளை 3-4 வாரங்களில் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில்,தேச துரோக வழக்கு சட்டப்பிரிவு 124 ஏ-வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை தற்காலிகமாக வழக்கு பதியக்கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.மேலும்,மத்திய,மாநில அரசுகள் தற்போதைக்கு தேச துரோக வழக்குகளை பதியமாட்டார்கள் என நம்புவதாகவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

குறிப்பாக,இந்த வழக்கில் ஏற்கனவே சிறையில் உள்ளவர்கள் பிணை கோரலாம் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

 

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

3 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

4 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

4 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

6 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

6 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

6 hours ago