புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காஷ்மீர் வைஷ்ணவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீரின் கத்ராவில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,காயமடைந்தவர்கள் 13 பேர் நாராயணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.எனினும், காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.இந்த நெரிசலில் சிக்கி டெல்லி,ஹரியானா, ஜம்மு – காஷ்மீர்,பஞ்சாப்பை சேர்ந்த பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் அதிகாலை 2:45 மணியளவில் நடந்தது என்றும்,ஆரம்ப அறிக்கைகளின்படி,கோயிலின் வரிசையில் நின்ற பக்தர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு,இதன் விளைவாக மக்கள் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டனர் என்றும்,அதைத் தொடர்ந்து நெரிசல் ஏற்பட்டு 12 பேர் உயிரிழந்தனர்,13 பேர் காயமடைந்தனர் என்றும் ஜம்மு – காஷ்மீர் டிஜிபி தில்பாக் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து,வைஷ்ணவி தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“மாதா வைஷ்ணோ தேவி பவனில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் இழந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது.அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு அனுதாபங்கள்.காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். மேலும்,இறந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் , காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…