உக்ரைனில் தங்கியிருக்கும் இடங்களில் இருந்து மாணவர்கள் வெளியேற வேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. குறிப்பாக உக்ரைனில் உள்ள சுமி நகரில் இருந்து இந்திய மாணவர்கள் உயிரை பணயம் வைத்து எல்லை நோக்கி நடந்தே செல்லும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெறும் போரின் விளைவாக ஏற்கனவே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்பவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே யாருக்கும் எந்தவிதமான ஆபத்து ஏற்பட கூடாது என்பதற்காக மாணவர்கள் வெளியேற வேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
மறுபக்கம், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் மற்றும் மாணவர்களை மீட்டு தாயகம் அழைத்துவர, 4 மத்திய அமைச்சர்களை நியமனம் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், உக்ரைனில் தங்கியிருக்கும் இடங்களில் இருந்து மாணவர்கள் வெளியேற வேண்டாம் என தெரிவித்துள்ளது.
உக்ரைனில் உள்ள சுமி நகரில் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் உயிரை பணயம் வைத்து 600 கி.மீ தொலைவில் உள்ள எல்லை நோக்கி நடந்து செல்லப்போவதாகவும், எங்கள் உயிருக்கு நிறைய ஆபத்துகள் உள்ளது. நாங்கள் நிறைய காத்திருந்துவிட்டோம், இனி மேலும் காத்திருக்க முடியாது எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என மாணவர்கள் தெரிவித்திருந்த வீடியோ வெளியாகியிருந்த நிலையில், எல்லையை நோக்கி செல்வது ஆபத்தானது என்பதால் இதுபோன்ற அறிவுறுத்தலை இந்திய வெளியுறவுத்துறை வழங்கியுள்ளது.
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…