நாடு முழுவதும் மதியம் 2 மணிக்கு தொடங்கிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
நாடு முழுவதும் நடப்பு ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 5 மணி அளவில் தேர்வு நிறைவுபெற்றது. நாடு முழுவதும் 3,862 மையங்களில் 16.14 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழ், மலையாளம், பஞ்சாபி உள்ளிட்ட மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.
தமிழகத்தில் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் 70 ஆயிரம் மாணவிகள், 40 ஆயிரம் மாணவர்கள் என மொத்தம் 1.10 லட்சம் பேர் எழுதினர். இதுபோன்று புதுச்சேரியில் 14 மையங்களில் நடந்த நீட் தேர்வை 7,123 மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.
நீட் தேர்வில் இயற்பியல் பிரிவில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்தாகவும், உயிரியல் வினாக்கள் எளிதாக இருந்ததாகவும் நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் குறித்து மாணவர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…