Categories: இந்தியா

ஐஸ்கிரீமில் கிடந்த விரல் யாருடையது? போலீசார் விசாரணையில் திருப்புமுனை…

Published by
கெளதம்

மும்பை : ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட ஐஸ்கிரீமில் மனித விரல் கிடந்த சம்பவத்தை தொடர்ந்து, போலீசார் விசாரணையில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அதாவது, மும்பை மலாட் பகுதியில் கடந்த வாரம் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட கோன் ஐஸ்கிரீமில் மனித விரல் கிடந்ததை கண்டு பெண் மருத்துவர் ஒருவர் அதிர்ச்சிக்குள்ளாகினார்.

இதனையடுத்து, அந்த பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில், யம்மோ (Yummo) ஐஸ்கிரீம் நிறுவனம் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஐஸ்க்ரீமுக்குள் மனித விரல் எப்படி வந்திருக்க முடியும் என்று, விரல் கிடந்த ஐஸ்கிரீம் மாதிரி தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைத்து, மும்பை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தற்பொழுது, அது யாருடைய விரல்? என்கிற பெரிய கேள்விக்கு பதிலளிக்கக்கூடிய ஒரு திருப்புமுனையை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஆம், புனேயில் உள்ள யம்மோ ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவருக்கு விரலில் காயம் ஏற்பட்டதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, ஐஸ்கிரீமில் கைவிரல் துண்டு கண்டெடுக்கப்பட்ட நாளும், இவரது விரலில் அடிபட்ட நாளும் ஒரே நாள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், போலீசார்  ஐஸ்க்ரீமுக்குள் மனித விரலின் டிஎன்ஏ-யும் அந்த நபரின் டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், அந்த சோதனை அறிக்கை வந்த பிறகே விரல் ஊழியர்களுடையதா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – அஇஅதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா சாடல்!

சென்னை : அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா (வி.கே.சசிகலா) நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில்…

5 minutes ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

33 minutes ago

இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..அலர்ட் செய்த வானிலை மையம்!

தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

56 minutes ago

டெல்லியை பந்தாடி த்ரில் வெற்றி…முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற குஜராத்!

டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…

1 hour ago

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

12 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

13 hours ago