ஏழு புதிய வழித்தடங்களில் அதிவேக புல்லட் ரயில் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக, இந்திய ரயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) ஆகியவற்றுடன் நிலங்களை கையகப்படுத்தும் பணியைத் தொடங்க உள்ளது.
நாட்டின் 7 புதிய வழித்தடங்களில் புல்லட் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.ரயில்வே துறை தேசிய நெடுஞ்சாலை ஆணையதிற்கு கடிதம் எழுதியது.மேலும் புல்லட் ரயில்களை இயக்குவதற்கான விவரங்களை வழங்கியுள்ளது.
இதனிடையே அண்மையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையிலான உள்கட்டமைப்பு அமைச்சர்கள் குழு கூட்டத்தில் கூடுதல் நிலங்களை கையகப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது.இந்த கூட்டத்தின் போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிலம் கையகப்படுத்தும் என்று முடிவு செய்யப்பட்டது மற்றும் இந்த செயல்முறையை முன்னோக்கி கொண்டு செல்ல 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.நான்கு பேர் கொண்ட பணிக்குழு நிலம் கையகப்படுத்துதல் மற்றும் செலவைப் பகிர்வதற்கான வழிமுறைகளை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . நாட்டில் 7 அதிவேக ரயில் பாதைகளின் வரைபடத்தை இந்திய ரயில்வே தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது .
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…