பீகாரில் 5 மாதங்களுக்கு பிறகு, பேருந்து சேவைகளுக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன்காரணமாக பொதுப்போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 3 -ம் கட்ட தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பல துறைகளுக்கு மாநில அரசு தளர்வுகள் அறிவித்து வருகிறது.
இந்நிலையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, பீகாரில் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. மேலும் அம்மாநில அரசு, முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி பயணிக்க வேண்டும் என மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.
அம்மாநிலத்தில் புதிதாய் 1,444 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,24,827 ஆக உள்ளது. இந்தநிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, பீகாரில் செப்டம்பர் 6- ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…