தொழிலதிபர் யூசுப் அலி சென்ற ‘LULU’ ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வயலில் தரையிறக்கப்பட்டது.விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த இந்திய தொழிலதிபரான யூசுப் அலி, அவரது மனைவி மற்றும் மூன்று பேரை ஏற்றிச் சென்ற LULU ஹெலிகாப்டர், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை அவசர அவசரமாக கொச்சின் பனங்காட்டில் உள்ள NH பைபாஸினருகில் சேறும்,சகதியுமாய் இருந்த இடத்தில் தரையிறக்கப்பட்டது.இதனால் ஹெலிகாப்டர் ஒரு சிறிய விபத்துக்குள்ளானது.இதனால் அதில் பயணம் செய்தவர்கள் சிறிய காயங்களுடன் முதலுதவிக்காக அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகையில், லூலூ குழுமத்தின் தலைவரான திரு. யூசுப் அலி மற்றும் அவரது குடும்பத்தினர்,கொச்சு கடவந்திராவில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து, சிறிது தொலைவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உறவினரை அழைப்பதற்காக ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர்.பனங்காட்டின் மீன்வளக் கல்லூரியின் மைதானத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பகோளாறு காரணமாக 200 மீ தொலைவிற்கு முன்னதாகவே தேசிய நெடுஞ்சாலை அருகில் தரையிறக்கப்பட்டுள்ளது,என்று தெரிவித்தனர்.
மேலும்,விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
யூசுப் அலி சமீபத்தில் 4.8 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்ட இரண்டாவது ஐக்கிய அரபு எமிரேட் பணக்காரராக உருவெடுத்துள்ளார் என்றும், லுலு குரூப் இன்டர்நேஷனலின் 7.4 பில்லியன் டாலர் வருவாயை வளைகுடா மற்றும் பிற இடங்களில் சுமார் 200 நிறுவனங்களுடன் பங்கு வைத்திருக்கிறார் என்றும் ஃபோர்ப்ஸ் இதழ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…