நாடு முழுவதும் மொத்தம் 63 சட்டமன்ற இடங்கள் காலியாக உள்ள நிலையில், கடந்த நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 56 சட்டமன்ற இடங்களுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.
56 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
உத்திர பிரதேசம்:
உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற 7 தொகுதியில் சமாஜ்வாதி ஒரு இடத்தில் வெற்றியும், பாஜக 6 இடத்தில் வெற்றியும் பெற்றுள்ளது.
மணிப்பூர்:
மணிப்பூரில் 5 தொகுதிகளில் பா.ஜ.க. 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இண்டிபெண்டண்ட் கட்சி 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
மத்திய பிரதேசம்:
மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக 12 தொகுதிகளில் வெற்றியும், 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 1 தொகுதியில் வெற்றியும், 8 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
குஜராத்:
குஜராத்தில் நடைபெற்ற 8 தொகுதி இடைத்தேர்தலில் பாஜக 7 இடங்களில் வெற்றி, ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.
கர்நாடாகா:
கர்நாடாகாவில் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
தெலுங்கானா:
தெலுங்கானாவில் நடைபெற்ற 1 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
ஹரியானா:
ஹரியானாவில் நடைபெற்ற 1 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
ஜார்க்கண்ட்:
ஜார்க்கண்ட்டில் நடைபெற்ற 2 தொகுதிகளில் காங்கிரஸ் 1 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 1 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…