Categories: இந்தியா

7 மாநில இடைத்தேர்தல் நிலவரம்.., மலை கிராமத்தில் முதன்முறையாக இயந்திர வாக்குப்பதிவு..!

Published by
மணிகண்டன்

இடைத்தேர்தல்: தமிழகத்தில் விக்கிரவாண்டி உட்பட நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு பின்னர் இன்று அங்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போல 6 வடகிழக்கு மாநிலங்களில் 12 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதில், பெரும்பாலான இடங்களில் கட்சி தாவல், ராஜினாமா உள்ளிட்ட காரணங்களாலும், சில இடங்களில் வேட்பாளர் மரணித்த காரணத்தாலும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கம், பீகார், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கம் : இம்மாநிலத்தில் ராய்கஞ்ச், ரணகாட் தெற்கு, பக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகளில் இடைதேர்தல் நடைபெறுகிறது. இதில் கடந்த தேர்தலில் 3 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

உத்தரகாண்ட் : பத்ரிநாத் மற்றும் மங்களூரு ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் இரு தொகுதிகளும் காங்கிரஸ் வெற்றி பெற்று இருந்தது.

பஞ்சாப் :  ஜலந்தர் மேற்கு தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆம் ஆத்மி வெற்றி பெற்று இருந்தது. ஆனால் அந்த வெற்றியாளர் பாஜகவில் இணைந்து தற்போது பாஜக சார்பில் வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.

இமாச்சலப் பிரதேசம் : டேஹ்ராவில் வெற்றி பெற்று இருந்த சுயேட்சை வேட்பாளர் பாஜகவில் இணைந்து போட்டியிடுகிறார். அதே போல ஹமிர்பூர், நலகர் தொகுதியிலும் முன்னதாக சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அதனால் அங்கும் பாஜக காங்கிரஸ் நேரடி போட்டி நிலவுகிறது.

பீகார் : ரூபாலி தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் முன்னர் வெற்றி பெற்று இருந்தது. அங்கு ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு நேரடி போட்டி நிலவுகிறது.

மத்தியப் பிரதேசம் : அமர்வாடாவில் கடந்த முறை காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர் இம்முறை பாஜக சார்பில் வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் தொகுதியில், நீதி, துரோங்கிரி ஆகிய மலை கிராமத்தில் இந்த இடைத்தேர்தலில் தான் முதன் முதலாக வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஓர் சில இடங்களில் தேர்தல் சலசலப்புகள் நிலவினாலும் அவைகள் உடனடியாக களையப்பட்டு விறுவிறுப்பாக அனைத்து இடங்களிலும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Recent Posts

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…

12 hours ago

இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…

14 hours ago

பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…

15 hours ago

வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…

15 hours ago

ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

சென்னை :  பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…

16 hours ago

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…

16 hours ago