மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 24முதல் ஏப்ரல் 14வரையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. நாளை மறுநாள், இந்த ஊரடங்கு முடியும் நேரத்தில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, அல்லது தளர்வு ஏற்படுமா என இன்னும் மத்திய , மாநில அரசுகள் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில், நிதித்துறை, பொதுத்துறை போன்ற முக்கிய துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த அமைச்சரவை கூட்டம் மூலம் ஆலோசிக்கப்படும் முக்கிய ஆலோசனைகள் பிரதமர் மோடிக்கு அளிக்கப்படும் எனவும், ஊரடங்கில் கொடுக்கப்பட வேண்டிய முக்கிய தளர்வுகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்ய ஏற்றுமதி, இறக்குமதி போன்ற முக்கிய துறைகளுக்கு தளர்வு அளிக்கப்பட வேண்டும் என பிரதமருக்கு ஆலோசனை வழங்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…