இந்தியாவில் கொரோனா தாக்கம் தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு மட்டும் வெளியில் வருகின்றனர்.
இந்நிலையில் பல இடங்களில் அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதையெடுத்து மும்பையை சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய குழந்தைக்கு ஒட்டகப்பால் வேண்டுமென ட்விட் செய்தார். பின்னர் 20 லிட்டர் ஒட்டகப்பால் ரயில்வே துறை கொண்டு சேர்த்தது.
ரேனு குமாரி என்ற பெண் பிரதமர் மோடி டேக் செய்து விட்டு ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அந்த பதிவில் , என்னுடைய மூன்றரை வயது மகனுக்கு உடல்நிலை சரியில்லை தற்போது ஆட்டுப்பால் , மாட்டுப்பால் ஒவ்வாமையை ஆக உள்ளது. ஒட்டகப்பால் வேண்டும்.
ஆனால் ஊரடங்கு தற்போது அமலில் உள்ளதால் ஒட்டகப்பால் கிடைக்கவில்லை . அதனால் பால் அல்லது பால் பவுடர் கிடைக்க உதவி செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த செய்தி ஐஏஎஸ் அதிகாரி அருண் போத்ராவின் பார்வைக்கு செல்ல உடனடியாக ராஜஸ்தானில் உள்ள ஒட்டகப்பால் பொருட்கள் தொடர்பான உற்பத்தி நிறுவனங்களிடம் பேசி நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால் பாலை எப்படி சேர்ப்பது என யோசித்தபோது ரயில்வே துறையிடம் உதவி கேட்டனர்.
தற்போது சரக்கு ரயில் மட்டுமே இயங்கி வரும் நிலையில் ராஜஸ்தானில் இருந்து மும்பைக்கு ஒட்டகப்பால் கொண்டு வரப்பட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…