அவரை வாழ்நாளில் மறக்கமுடியாது.! பால் வாங்கி கொடுத்த காவலருக்கு குழந்தையின் தயார் நன்றி.!

Published by
கெளதம்

ஓடும் ரயிலில் 3 வயது குழந்தைக்கு ஓடி சென்று பால் வாங்கி கொடுத்த பாதுகாப்பு படைகாவலருக்கு குழந்தையின் தாயார் நன்றி.

கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில தளர்வுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த பொது முடக்கத்தால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாமல் கைகளில் காசு இல்லாமல் பட்டினியில் வாடும் இவர்களுக்காக இயக்கப்பட்ட பில்காம்-கோரக்பூர் சிறப்பு ரயிலில் பெற்றோருடன் பயணம் செய்த 3 மாத குழந்தைக்கு பாதுகாப்பு படைவீரரான இந்தர் சிங் என்பவர் பால் வாங்கி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, பாலுக்காக அழுத குழந்தையின் பசியை போக்க போபால் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படை காவலராக பணியாற்றும் இந்தர் சிங் யாதவிடம் உதவியை கேட்டுள்ளனர். அவரும் உடனே விரைந்து சென்று அந்த 3 மாத குழந்தைக்கு கடையில் பால் வாங்கி வந்துள்ளார். ஆனால், அதற்கு முன்பு ரயில் புறப்பட ஆரம்பித்தம் உடனே, இந்தர் சிங் ஓட தொடங்கிய ரயிலுடன் ஓடி சன்னல் வழியாக குழந்தையின் அம்மாவிடம் பாலை கொடுத்துள்ளார்.

இந்தர் சிங் மனிதநேயத்துடன் செய்த இந்த காரியம் ரயில்வே நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கேமராவில் பதிவான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இதனையடுத்து ரயில்வே அமைச்சரான பியூஷ் கோயல் இந்தர் சிங்கின் இந்த செயலை பாராட்டியது மட்டுமில்லாமல் ரொக்க பரிசு வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். 

இந்நிலையில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு உதவிய இந்தர் சிங்க்கு நன்றியை தெரிவித்துள்ளார். இதில் அவர் கூறியது என்னவென்றால் குழந்தையின் பசியை அமைத்த மின்னல் வேகத்தில் அவர் ஓடிவந்தது என்னால் வாழ்நாளில் மறக்கமுடியாது. மனிதாபிமானம் இன்னும் உயிருடன் தான் இருக்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

MI vs DC: டெல்லியை வீழ்த்தி.., பிளே ஆஃப்-யில் மாஸ் என்ட்ரி கொடுத்த மும்பை.!

MI vs DC: டெல்லியை வீழ்த்தி.., பிளே ஆஃப்-யில் மாஸ் என்ட்ரி கொடுத்த மும்பை.!

மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…

3 hours ago

அப்துல் கலாமின் பயோபிக் படத்தில் நடிக்கும் தனுஷ்.! இயக்குனர் யார் தெரியுமா?

சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…

3 hours ago

ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

4 hours ago

175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?

வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…

5 hours ago

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்.? ஊர்ந்தீர்களா? தவழ்ந்தீர்களா? ஸ்டாலின் மீது இபிஎஸ் விமர்சனம்.!

சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…

5 hours ago

MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!

மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும்  டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…

7 hours ago