Categories: இந்தியா

இதற்கு மேல் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது – கர்நாடகா திட்டவட்டம்!

Published by
பாலா கலியமூர்த்தி

காவிரியில் இருந்து இதற்கு மேல் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடக அரசு வாதத்தில், தமிழகத்திற்கு இனி தண்ணீரை திறக்க முடியாது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 53% மழை பற்றாக்குறை நீடிக்கிறது. கர்நாடகாவில் 4 அணைகளிலும் செப்.25 வரை நீர்வரத்து கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது 53.04 சதவீதம் குறைந்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள 161 தாலுகாக்களை வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அரசு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். 161 தாலுகாக்களில் 34 தாலுகாக்கள் மிதமான வறட்சி, 32 தாலுகாக்கள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, 161 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இனி நீரை திறக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால்,  கர்நாடகா காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீர் தருவது இல்லை. இதுதொடர்பாக நீண்ட காலம் சட்ட போராட்டங்கள் நடந்தன. கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டும், தண்ணீர் தர மறுக்கிறது. போதுமான தண்ணீர் இல்லாததால் திறக்க இயலாது என கூறி வருகிறது. இதனால் இரு மாநிலங்களிலும் பிரச்சனை நீடித்து வருகிறது.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் அதை கர்நாடகா மதிப்பதில்லை என கூறி கர்நாடகா அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு ஒருபக்கம் சட்ட போராட்டமும் நடத்தி வருகிறது. மறுப்புறம்,  கர்நாடக மக்கள் நலனே முக்கியம், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என கர்நாடகா தெரிவித்து வருகிறது. இதனால் தமிழ்நாடு, கர்நாடகா இடையேயான காவிரி நீர் பங்கீட்டு விவகாரம் பூதாகரமாகி உள்ளது. இந்த சமயத்தில் தமிழகத்திற்கு இனி தண்ணீரை திறக்க முடியாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நாமக்கல் மக்களே…டேங்கர் லாரியில் இருந்தது சமையல் எண்ணெய் இல்லை! காவல்துறை விளக்கம்!

நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…

39 minutes ago

கூட்டணி குறித்த கேள்வி! “சந்தோஷமான செய்தி விரைவில் வரும்” – ராமதாஸ் பதில்!

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…

1 hour ago

டோனால்ட் டிரம்ப் உடன் மோதல்…புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்!

வாஷிங்டன் :  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…

3 hours ago

அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசக்கூடாது – அட்வைஸ் கொடுத்த அமித்ஷா!

மதுரை : மதுரை வேலம்மாள் திடலில் இன்று (ஜூன் 8, 2025) மாலை 3 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

4 hours ago

“ஐயா நல்ல செய்தியை சீக்கிரம் சொல்லுவாங்க..”- ஜி.கே.மணி பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை…

5 hours ago

“இது வெஸ்ட் இண்டீஸ் போகாத”…ரோஹித் எச்சரிக்கையை மீறி சென்ற புஜாராவுக்கு நடந்த மர்ம சம்பவம்?

சென்னை : 2012-ல் இந்தியா A கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்தபோது, வீரர் செட்டேஷ்வர் புஜாராவுக்கு ஒரு…

5 hours ago