பட்டியாலா தொகுதியில் கேப்டன் அமரீந்தர் சிங் படுதோல்வி..!

Published by
murugan

பஞ்சாப்பில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது. இவர்களின் பிரச்சனையை காங்கிரஸ் மேலிடத்தால் கூட சரிசெய்யமுடியவில்லை. ஒருகட்டத்தில் அமரீந்தர் தன்னுடைய தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

பின்னர், பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார். இந்நிலையில்,  பாட்டியாலா  தொகுதியில் போட்டியிட்ட  கேப்டன் அமரீந்தர் சிங் தோல்வி அடைந்தார். பாட்டியாலா  தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் அஜீத் பால் சிங் கோலியிடம் அமரீந்தர் படுதோல்வி அடைந்தார்.

பாட்டியாலா சட்டமன்றத் தொகுதியில் 13777 வாக்குகள் வித்தியாசத்தில் அஜித் வெற்றி பெற்றுள்ளார். அஜித் 39,852 வாக்குகளும், அமரீந்தர் 25,169 வாக்குகளும் பெற்றனர். அஜித்துக்கு 45.21 வாக்குகளும், அமரீந்தர் 28.52 சதவீத வாக்குகளும் பெற்றனர். இத்தொகுதியில் மொத்தம் 88,255 வாக்குகள் பதிவாகின. கடந்த  2017 ஆம் ஆண்டு பாட்டியாலா தொகுதியில் அமரீந்தர் 52,407 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் பல்பீர் சிங்கை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

7 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

7 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

8 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

8 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

9 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

9 hours ago