தெலுங்கானா மாநிலத்தில் கார் ஒன்று விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக விழுந்ததில், காரில் பயணித்த 5 பேர் பரிதமாக உயிரிழந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தின் கரீம் நகர் பகுதியில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் உஸ்னாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக அந்த கிணற்றில் விழுந்துள்ளது. இதனையடுத்து காரில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்ப்பதற்குள் கார் முழுவதும் கிணற்றுக்குள் மூழ்கியுள்ளது. எனவே, இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து மீட்பு பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பின் கிணற்றுக்குள் விழுந்த கார் மீட்கப்பட்ட து. ஆனால், காரில் பயணித்தவர்கள் ஒருவரும் காரில் இல்லாததால் கிணற்றுக்குள் மேலும் தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுவரை மூன்று பேர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இவர்களின் உடல் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் காரில் இருந்த இருவரின் சடலங்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…