Karnataka CM Siddaramaiah [File Image]
மைசூரு: போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி மற்றும் உறவினர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி மற்றும் அவர்களது உறவினர் என மொத்தம் 9 பேர் மீது போலி ஆவணங்கள் தயாரித்ததற்காக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (Mysore Urban Development Authority – MUDA) அரசு நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து பயன்படுத்தியதாக இந்த புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் சினேகமாயி கிருஷ்ணா என்பவர் இந்த புகாரை மைசூருவில் உள்ள விஜயநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், அரசு கையகப்படுத்தும் பட்டியலில் இருந்த குறிப்பிட்ட நிலமானது போலி அவனங்களினால் அது வேறு ஒருவருக்கு சொந்தமானதாக பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
1998ஆம் ஆண்டே அரசு கையகப்படுத்துதல் பட்டியலில் இருந்து அது விடுவிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால், 2010ஆம் ஆண்டு அரசு நிலம் கையாகப்படுத்தும் பட்டியலில் கூட அந்த குறிப்பிட்ட நிலம் பட்டியலிடப்பட்டு இருந்தது என்றும் பல்வேறு குற்றசாட்டுகளை அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகாரில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா , அவரது மனைவி பார்வதி, நில உரிமையாளர் அவரது மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி தேவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் என்று 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளன. இதே போல புகார் மாநில ஆளுநர், தலைமை செயலர், வருவாய்த்துறை செயலர் ஆகியோருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…